மதுரையில் நாளை டி.இ.டி., மாதிரி தேர்வு : தினமலர் நடத்துகிறது

மதுரையில் தினமலர் மற்றும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் இணைந்து நடத்தும் டி.இ.டி. இலவச மாதிரி தேர்வு (தமிழ் மீடியம்) நாளை (ஏப்.,21) நடக்கிறது.



மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் மையத்தில் காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை இத்தேர்வு நடக்கும். முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி. அவர்கள் காலை 9:30 மணிக்கு வர வேண்டும்.


ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் ஏப்.,29 மற்றும் 30ல் நடக்கும் டி.இ.டி., தேர்வில் பங்கேற்பவர்கள் அதிக மதிப்பெண் பெறும் வகையில், தினமலர் சார்பில் இந்த இலவச மாதிரி தேர்வு நடக்கிறது. அரசு நடத்தும் தேர்வுக்கான முன்தயாரிப்பு முயற்சியாக இந்த தேர்வு அமையும்.
தேர்வில் வழங்கப்படும் நேரத்திற்குள், விடைகளை எவ்வாறு எழுதி முடிக்கலாம் என்ற நேர மேலாண்மை குறித்த அனுபவமும் பங்கேற்கும் தேர்வர்களுக்கு கிடைக்கும். விபரங்களுக்கு 98426 34271ல் என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.