6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டம்

ஊதிய குழு பரிந்துரைகளை அரசு ஊழியர்கள் கருத்து ஒற்றுமையின்
அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்புதிய ஓய்வூதிய திட்டத்தைதிரும்ப பெற்று பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவே
ண்டும்புதிய ஊதிய மாற்றம் செய்யப்படும் வரை 20 சதவீதஇடைக்கால நிவாரணம் வழங்கிட வேண்டும்சிறப்பு காலமுறைஊதியத்தை ஒழித்து வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியம்வழங்கிட வேண்டும்தொகுப்பூதியம்மதிப்பூதியம் போன்றமுறையிலான பணி நியமனங்களை ரத்து செய்துவிட்டு காலமுறைஊதியத்தில் கால பணி இடங்களை நிரப்ப வேண்டும்சாலைபணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிகாலமாகஅறிவிக்க வேண்டும் ஆகிய 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திதமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் இன்று முதல்(செவ்வாய்க்கிழமை)வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளது.கிரிஜா வைத்தியநாதன்காரணம்

இதுகுறித்து அந்த சங்கத்தின் மாநில தலைவர் மு.சுப்பிரமணியன்,பொதுச்செயலாளர் மு.அன்பரசு ஆகியோர் கூறியதாவது:–
தமிழ்நாடு அரசு ஊழியர்களுடைய 6 அம்ச கோரிக்கைகளைநிறைவேற்ற வேண்டும் என்று கடந்த பிப்ரவரி மாதம் 2–ந்தேதி மாநிலமுழுவதும் உண்ணாவிரத போராட்டமும்மார்ச் 15–ந்தேதி மாவட்டதலைநகரங்களில் பேரணியும் நடத்தினோம்எங்களுடையகோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் ஏப்ரல் 25–ந்தேதி(இன்று)காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்துவோம் என்றுஅரசுக்கு அறைகூவல் விடுத்து இருந்தோம்.
அதற்கு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என்று அமைச்சர்செங்கோட்டையன் கூறியிருந்தார்ஆனால் அவரை பேச்சுவார்த்தைநடத்தவிடாமல் தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்தடுத்து விட்டார்.
லட்சம் ஊழியர்கள் பங்கேற்பு
எனவே நாங்கள் திட்டமிட்டபடி நாளை(இன்றுமுதல் காலவரையற்றவேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்இந்தபோராட்டத்துக்கு வணிக வரித்துறைஊரக வளர்ச்சி துறை,அங்கன்வாடி பணியாளர் சங்கம் உள்பட 61 சங்கங்கள் ஆதரவுஅளித்துள்ளன.
இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டஊழியர்கள் பங்கேற்க உள்ளனர்இதன் மூலம் தமிழக அரசுக்கு நாள்ஒன்றுக்கு ரூ.500 கோடி வரை இழப்பீடு ஏற்படும்அரசு நிர்வாகமும்முற்றிலும் முடங்கும்இந்த போராட்டம் விவசாயிகளுக்குஆதரவாகவும் அமையும்.

26–ந்தேதி மாநில முழுவதும் வட்ட கிளைகளில் ஆர்ப்பாட்டமும், 27, 28 ஆகிய தேதிகளில் மாவட்ட தலைநகரங்களில் சாலைமறியலில்ஈடுபட்டு சிறை நிரப்பும் போராட்டமும், 29, 30 ஆகிய தேதிகளில்கண்டன பொதுக்கூட்டங்களும்மே.2–ந்தேதி முதல் சென்னையில்காலவரையற்ற உண்ணாவிரதமும்கலெக்டர் அலுவலகங்களில்காத்திருப்பு போராட்டமும் நடத்தப்படும்இவ்வாறு அவர்கள் கூறினர்.