குரூப் 3 : சான்றிதழ் சரிபார்ப்பு

சென்னை: 'குரூப் - 3' பதவி உட்பட, மூன்று பதவிகளுக்கான போட்டி தேர்வுகளில் தேர்வானவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலர், விஜயகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: * தடய அறிவியல், இளநிலை அறிவியல் அதிகாரி பணிக்கு, 30 காலியிடங்களுக்கு, 2016, அக்., 16ல், தேர்வு நடந்தது. இதில், 65 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு, மே, 5ல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் * மருத்துவ சார்நிலை பணியில், வட்டார சுகாதார புள்ளியியலாளர் பதவியில், 173 காலியிடங்களுக்கு, ஜூன் 5ல், தேர்வு நடந்தது. 342 பேர் தேர்வு பெற்றனர். அவர்களுக்கு, மே 15 முதல், 19 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும்
* 'குரூப் - 3 ஏ' பிரிவில் அடங்கிய, கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பதவியில், 24 இடங்களுக்கு, 2013, ஆக., 3ல், தேர்வு நடந்தது. 34 பேர்
தேர்வு பெற்றனர். அவர்களுக்கு, மே 8ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும். கூடுதல்
விபரங்களை, டி.என்.பி.எஸ்.சி., இணைய
தளத்தில் அறிந்து
கொள்ளலாம்.