மே 1-ஆம் தேதி முதல் பெட்ரோல்-டீசல் விலை தினசரி நிர்ணயம்: 5 நகரங்களில் அமலாகிறது

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலை நிலவரத்துக்கு ஏற்ப,இந்தியாவில் நாள்தோறும் பெட்ரோல்-டீசலுக்கு புதிய விலை நிர்ணயம்
செய்யும் நடைமுறை வரும் மே மாதம் 1-
ஆம் தேதி அமலுக்கு வரவுள்ளதுஇந்தபுதிய நடைமுறை 5 நகரங்களில் முதல்கட்டமாக அமலுக்கு வரவுள்ளது.இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவனத்தின் (ஐஓசிதலைவர் பிஅசோக்,தில்லியில் பிடிஐ செய்தியாளரிடம் புதன்கிழமை கூறியதாவது:

நாட்டில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில், 95 சதவீத விற்பனைநிலையங்கள்அதாவது சுமார் 58 ஆயிரம் பெட்ரோல் விற்பனை நிலையங்கள்,மத்திய அரசுக்குச் சொந்தமான ஐஓசிபாரத் பெட்ரோலியம் நிறுவனம்,ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் ஆகியவைகளுக்குச் சொந்தமானவைஆகும்தேர்வு செய்யப்பட்ட 5 முக்கிய நகரங்களில் மட்டும் வரும் மே மாதம் 1-ஆம் தேதி முதல்நாள்தோறும் பெட்ரோல்-டீசலுக்கு புதிய விலையை நிர்ணயம்செய்யும் நடைமுறையை மேற்கண்ட நிறுவனங்கள் அமல்படுத்தவுள்ளன.இதையடுத்துநாடு முழுமைக்கும் படிப்படியாக இந்த நடைமுறைவிரிவுபடுத்தப்படும்.
முதலில்புதுச்சேரிஆந்திரத்தின் விசாகப்பட்டினம்ராஜஸ்தானின் உதய்ப்பூர்,ஜார்க்கண்டின் ஜாம்ஷெட்பூர்சண்டீகர் ஆகிய 5 நகரங்களில் நாள்தோறும்பெட்ரோல்-டீசலுக்கு புதிய விலையை நிர்ணயம் செய்யும் நடைமுறைஅமல்படுத்தப்படவுள்ளதுநாள்தோறும் பெட்ரோல்-டீசலுக்கு புதிய விலையைநிர்ணயிப்பது தொழில்நுட்ப ரீதியில் சாத்தியமானதுதான்ஆனால்அதைமுதலில் பரிசோதனை ரீதியில் செயல்படுத்த வேண்டியுள்ளதுபரிசோதனைமுறையில்இந்த நடைமுறை செயல்படுத்தப்பட்டதும்அப்போது அதன்தாக்கங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும்.
பிறகுஇந்த நடைமுறை நாடு முழுமைக்கும் எண்ணெய் நிறுவனங்கள்விரிவுபடுத்தும்பரிசோதனை முயற்சிஒரு மாதத்தில் தொடங்கி வைக்கப்படும்என்று பி.அசோக் கூறினார்ஆனால்பரிசோதனை முயற்சி எப்போது தொடங்கிவைக்கப்படும் என்பது குறித்து பி.அசோக் தெரிவிக்கவில்லைஆனால்,எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் கூறியபோதுவரும் மே மாதம் 1-ஆம் தேதிமுதல் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தனஇந்தியாவில் முன்பு பெட்ரோல்-டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம்மத்திய அரசிடமே இருந்தது.
இந்நிலையில்பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை எண்ணெய்நிறுவனத்திடம் மத்திய அரசு கடந்த 2010-ஆம் ஆண்டு ஜுன் மாதம் அளித்தது.இதேபோல்டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தையும் எண்ணெய்நிறுவனங்களிடம் கடந்த 2014-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒப்படைத்தது.அதன்படிசர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலைஅமெரிக்கடாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்பஇந்தியாவில்மாதந்தோறும் 1 மற்றும் 16-ஆம் தேதிகளில் பெட்ரோல்-டீசல் விலையைஎண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றனஆனால்விலையைமாற்றியமைப்பதற்கு முன்பு மத்திய அரசிடம் எண்ணெய் நிறுவனங்கள்கலந்தாலோசனை நடத்த வேண்டும்.

இந்நிலையில்நாள்தோறும் பெட்ரோல்-டீசலுக்கு புதிய விலையை நிர்ணயிக்கும்நடைமுறை அமலுக்கு வந்தால்சர்வதேச சந்தை நிலவரம்அமெரிக்க டாலருக்குநிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை எண்ணெய் நிறுவனங்கள்தொடர்ந்து கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்தற்போதைய நிலவரப்படி,எண்ணெய் நிறுவனங்களுக்கு இடையே பெட்ரோல்-டீசல் விலையில் சிலகாசுகள் ரீதியிலேயே வித்தியாசம் காணப்படுகிறதுநாள்தோறும் புதிய விலைநிர்ணயிக்கப்பட்டால்இனி அதிக அளவுக்கு பெட்ரோல்-டீசல் விலையில்மாற்றம் இருக்காதுசில காசுகள் மட்டுமே ஏற்றஇறக்கங்கள் இருக்கும்வாகனஓட்டிகள் மத்தியிலும் பெரிய அளவில் எதிர்ப்பு இருக்காது.