பள்ளி கல்வித்துறை மவுனம் : 'TET' தேர்வு குழப்பம் நீடிப்பு

ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்தேர்வில்அரசு பள்ளிஆசிரியர்களுக்கு விலக்கு வழங்குவது குறித்துபள்ளிக்
கல்வித்துறை முடிவு எடுக்காததால்ஆசிரியர்கள் குழப்பம்அடைந்துள்ளனர்.

        ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்தேர்வுஏப்., 29, 30ல்நடக்கிறதுதேர்வுக்கான விண்ணப்பங்கள்மார்ச், 23 வரைபெறப்பட்டுபரிசீலனை நடக்கிறது.


 'இந்த தேர்வில்அரசு பள்ளி ஆசிரியர்களாக, 2010 ஆக., 23க்கு பின் நியமனம் பெற்றவர்கள்தேர்ச்சி பெற வேண்டும்.இல்லாவிட்டால்அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவர்என,பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் எச்சரிக்கைவிடுத்துள்ளார்இதற்குஅரசு பள்ளி ஆசிரியர்கள் தரப்பில்எதிர்ப்பு எழுந்ததுதமிழகத்தில், 2011 நவ., 15ல் தான், 'டெட்'தேர்வே அறிமுகமானதுஅப்படியிருக்கையில்அதற்கு முன்பணி நியமனம் பெற்றவர்களுக்கு, 'டெட்தேர்வு எப்படிகட்டாயமாகும் எனஆசிரியர் சங்கத்தினர் கேள்விஎழுப்பியுள்ளனர்இதுதொடர்பாகபள்ளிக் கல்வி செயலர்மற்றும் இயக்குனர் ஆகியோருக்குபல்வேறு சங்கத்தினர் மனுஅளித்து உள்ளனர்அதற்குகல்வித் துறை அதிகாரிகள்,விளக்கமளிக்கவில்லை.


பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொது செயலர் பேட்ரிக்ரைமண்ட் கூறியதாவதுசிறுபான்மை அந்தஸ்து பெற்றபள்ளிஆசிரியர்களுக்கு, 'டெட்தேர்ச்சி தேவையில்லை எனஉச்சநீதிமன்றம் விலக்கு அளித்துள்ளதுஅரசாணைக்கு முந்தையதேதியில்பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு, 'டெட்'தேர்ச்சியை கட்டாயம் ஆக்க முடியாதுஅவர்களுக்கு,ஆண்டுக்கு ஒரு முறை புத்தாக்க பயிற்சி வகுப்பு நடத்திகொள்ளலாம் என்றே கூறப்பட்டுள்ளது.எனவே, 2010ஆகஸ்ட்டுக்கு பின், 2011 நவம்பருக்கு முன் நியமிக்கப்பட்ட,அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கவேண்டும்இவ்வாறு அவர் கூறினார்.