நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் 984 உதவியாளர்கள் பணி: 29க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு சுகாதார காப்பீடு, வாகன காப்பீடு, ஆயுள் காப்பீட்டு சேவைகளை சிறப்பாக செய்து வரும் இந்திய அரசு நிறுவனமான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (NIACL). இந்த நிறுவனம்
31 பிராந்திய அலுவலகங்களுடன் 28 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் காலியாக உள்ள 984 உதவியாளர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து வரும் 29-ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: New India Assurance Company Limited (NIACL)

மொத்த காலியிடங்கள்: 984

பணி: Assistant Class III சம்பளம்:
மாதம் ரூ. 14,435 - 40,080 தகுதி:
ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு:
30.06.2016 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை:
www.newindia.co.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:
29.03.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.newindia.co.in
என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.