பி.எஸ் 3 வாகனங்கள் ஏப்ரல் 1 முதல் விற்க தடை: உச்சநீதிமன்றம்

பி.எஸ். 3 விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்ட வாகனங்களை ஏப்ரல் 1ம் தேதி முதல் விற்பனை தடை செய்யதுள்ளது உச்ச நீதிமன்றம்.

இந்த சூழ்நிலையில், பி.எஸ். 3 விதிமுறைகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்ட கார்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் விற்பனையாகாமல் தேங்கி உள்ளன. இவற்றை விற்பனைக்கு அனுமதிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் கோரப்பட்டது. இதற்கு சுற்றுசூழல் மாசு கட்டுப்பாட்டு ஆணையம் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து ஏப்ரல் 1ம் தேதி முதல் பி.எஸ். 3 வாகனங்களை பதிவு செய்ய கூடாது என உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.