CBSE புத்தகம் வாங்க கூடுதல் அவகாசம்

தேசிய கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்களை வாங்குவதற்கான கால அவகாசம், பிப்., 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகள், என்.சி.இ.ஆர்.டி., தயாரித்துள்ள புத்தகங்களை மட்டுமே பின்பற்ற வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.

அனைத்து பள்ளிகளும், என்.சி.இ.ஆர்.டி., நிறுவனத்திடமிருந்து, 'ஆன்லைனில்' புத்தகம் கொள்முதல் செய்யலாம் என, அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு விண்ணப்பிக்க, பிப்., 22ம் தேதியை 
கடைசி நாளாக, சி.பி.எஸ்.இ., அறிவித்தது. இந்நிலையில், புத்தகம் கொள்முதல் செய்வதற்கான தேதியை, பிப்., 28க்கு நீட்டித்து, சி.பி.எஸ்.இ., 
உத்தரவிட்டுள்ளது.
My Blogger TricksAll Blogger TricksLatest Tips and Tricks