பி.எப்., சந்தாதாரர்களுக்கு ஆதார் எண் பதிவு

மதுரை: மதுரை மண்டல கமிஷனர் ரபீந்திர சமல் கூறியதாவது: வருங்கால வைப்பு நிதி (பி.எப்.,) நிறுவன ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற உயிர்வாழ் சான்று
அவசியம். இவர்கள் ஆதார் எண் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. தற்போது பி.எப்., சந்தாதாரர்கள் மற்றும் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் சந்தா செலுத்துவோரும் ஆதார் எண் பதிவு செய்வது அவசியம். இதற்காக சிறப்பு முகாம் மதுரை, திண்டுக்கல், சிவகாசி பி.எப்., அலுவலகங்களில் நடக்கிறது, என கூறியுள்ளார்.