தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களுக்கு வருகிற மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை

அய்யா வைகுண்டசாமி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி  மற்றும் நெல்லை மாவட்டங்களுக்கு வருகிற மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



இது தொடர்பாக தூத்துக்குடி ஆட்சியர் ரவிகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : 


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அய்யா வைகுண்டசாமி வழிபாட்டுத் தலங்களில் அய்யா வைகுண்டசாமி பிறந்த நாள் விழா கொண்டாட்டம் மாசி மாதம் 20-ம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு வருகிற 04.03.2017 சனிக்கிழமை என்பதால் தூத்துக்குடி மாவட்டத்தில் அன்றைய நாளில் பணிநாளாக இயங்கும் கல்வி நிறுவனங்கள், சுகாதாரத்துறை, மின்வாரியம் மற்றும் இதுபோன்ற இதர அரசு அலுவலகங்களுக்கு உள்ளுர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
 


எனினும் 04.03.2017 அன்று பள்ளி மற்றும் கல்லூரித் தேர்வுகளுக்கும் சம்பந்தப்பட்ட மாணவ/மாணவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்களுக்கும் இவ்விடுப்பு பொருந்தாது எனத் தெரிவிக்கப்படுகிறது. இது செலாவணி முறிவுச் சட்டத்தின்படி (நேபழவயைடிடந ஐளெவசரஅநவெ யுஉவ-1881) பொது விடுமுறை நாளல்ல. இந்த விடுமுறைக்குப் பதிலாக 11.03.2017 இரண்டாம் சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது.