மே 19-ம் தேதி 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

சென்னை: பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: - மே 19-ம் தேதி 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளதாகவும், மே 12ம் தேதி 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளார்.
மேலும் இடை நிலை ஆசிரியர் தகுதித்தேர்வு ஏப்ரல் 29ம் தேதி நடைபெறும் என்றும் கூறியுள்ளார்.