'நீட்' தேர்வு விண்ணப்பம் 10 நாட்களே அவகாசம்

மத்திய அரசு சார்பில், மருத்துவ படிப்புக்கான, நீட் நுழைவுத்தேர்வு, மே, 7ல்,நாடு முழுவதும் நடக்க உள்ளது. இதற்கான, 'ஆன்லைன்' பதிவு, 

ஜன.,31ல் துவங்கியது;மார்ச்,1இரவு,12:00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
இந்த அவகாசம் முடிய, இன்னும், 10 நாட்களே உள்ளன.ஆனால், தமிழகத்தில் மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, நீட் தேர்வு உண்டா, இல்லையாஎன, தெளிவாக மாநில அரசு அறிவிக்கவில்லை.நீட் தேர்விலிருந்து விலக்கு கேட்டு, தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றி, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. தமிழகத்தில், அரசுக்கு எதிரான போராட்டம் வலுத்து வரும் நிலையில், தமிழக அரசின் மசோதா,ஜனாதிபதியால் ஏற்றுக் கொள்ளப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.