ரயில் டிக்கெட் சலுகை; ஆதார் கட்டாயம்

புதுடில்லி: ரயில் டிக்கெட்டில் சலுகை பெற, ஆதார் அட்டையை கட்டாயமாக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.




பட்ஜெட்:

மத்திய அரசின் பொது பட்ஜெட்டுடன், ரயில்வே பட்ஜெட் சேர்த்து, வரும் பிப்., 1ம் தேதி, பார்லிமென்டில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. ரயில் டிக்கெட்டில் சலுகை பெற, ஆதார் அட்டையை கட்டாயம் ஆக்குவது தொடர்பான அறிவிப்பு, பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கட்டாயம்:

ரயில் பயணிகளில் மூத்த குடிமக்கள் உட்பட, 50 பிரிவினருக்கு, டிக்கெட் கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது. இந்த சலுகையை முறைகேடாக பயன்படுத்துவதை தடுக்கும் நோக்கில், ஆதார் கட்டாயம் ஆக்கப்படுவதாக கூறப்படுகிறது.