சாக்லேட்டுக்கு பதில் கடலை மிட்டாய்!

அன்னிய உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த, சிவகங்கை, தனியார் பள்ளியில், சாக்லேட்டுக்கு பதிலாக, கடலை மிட்டாய் வழங்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை, சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில், நேற்று குடியரசு தினம் கொண்டாடப்பட்டது.

தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமையில் நடந்த விழாவில், ஆரம்ப சுகாதார நிலைய அரசு மருத்துவர் சிவசங்கரி, தேசியக் கொடியேற்றி வைத்தார்.பின், மாணவ, மாணவியர் மற்றும் அவர்களின் பெற்றோருக்கு, கடலை மிட்டாய் வழங்கப்பட்டது. பெப்சி, கோககோலா போன்ற வெளிநாட்டு குளிர்பானங்களை தவிர்க்க, வணிகர்கள் உறுதி 
ஏற்றுள்ளனர். அதேபோல, ஆரோக்கியத்துக்கு கேடான சாக்லேட்டுகளை தவிர்க்கும் வகையில், குடியரசு தின இனிப்பாக, கடலை மிட்டாய் வழங்கியதாக, தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.