பொதுமக்கள் கவலைப்பட வேண்டாம் போதிய பணம் கையிருப்பில் உள்ளது : அருண் ஜேட்லி

ரிசர்வ் வங்கியிடம் போதிய பணம் கையிருப்பில் உள்ளதாகவும், அதனை படிப்படியாக புழக்கத்தில் விட்டு வருவதால், பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என, நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர் கூறும் போது டிசம்பர் 30ம் தேதிக்குப் பின்னர் சீரான பணப்புழக்கம் நடைபெற தேவையான பணிகளை ரிசர்வ் வங்கியுடன் இணைந்து, நிதியமைச்சகமும் மேற்கொண்டுள்ளது.
அத்துடன் புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கையிருப்பிலும் போதிய பணம் உள்ளதால், நாடு முழுவதும் தற்போது அதனை விநியோகம் செய்து வருகிறோம்.
எனவே, பொதுமக்கள் கவலைப்பட வேண்டாம் என்று, நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.