பிஎஸ்என்எல் ரூ.99/-, 149/- மற்றும் ரூ.339/- பேக் : ஏர்டெல், ஜியோவிற்கு சரியான போட்டி.!

நாட்டில், ரிலையன்ஸ் ஜியோவுடன் நடக்கும் கட்டண யுத்தத்தின் ஒரு பகுதி தான் இது. வழக்கமாக ஏர்டெல் நிறுவனம் தான் ஜியோவிற்கு எதிரான மற்றும் கிட்டத்தட்ட சமமான சலுகைகளை வழங்கி அதிரடி காட்டும். இப்போது அதே பாணியை அரசு நடத்தும் தொலைத்தொடர்பான பிஎஸ்என்எல் நிறுவனமும் ஜியோவிற்கு சமமான சலுகைகளை வழங்கத் தொடங்கியுள்ளது

சமீப காலமாக இந்தியாவின் எந்தவொரு தொலைத்தொடர்பு நிறுவனத்தின், எந்தவொரு நடவடிக்கைகளுக்கும் பின்புலமாக மூலகாரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிற்கிறது. புதிய திட்டமாக இருப்பினும் சரி, புதிய சலுகையாக இருப்பினும் சரி அனைத்துமே ரிலையன்ஸ் ஜியோவுடன் போட்டி போடும் முனைப்பில் தான் வெளியாகின்றன, உடன் தங்களிடம் ஏற்கனவே இருக்கும் வடிக்கையாளர்களை காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியாகவும் இப்புதிய சலுகைகள் பார்க்கப்படுகின்றன. அப்படியாக பிஎஸ்என்எல் அதன் புதிய ரூ.149/- பேக் தனை அறிமுகம் செய்துள்ளது.!
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்