பணமில்லாத பரிவர்த்தனைக்காக 92 இடங்களில் 'ஸ்வைப் மிஷின்'

சென்னை: பணமில்லாத பரிவர்த்தனைக்காக, தெற்கு ரயில்வேயில், 22 ரயில் டிக்கெட் முன் பதிவு மையங்கள் உட்பட, 92 இடங்களில், 'ஸ்வைப் மிஷின்'கள்
வைக்கப்பட்டுள்ளன.ரயில் டிக்கெட் எடுப்போர், பணமில்லா பரிவர்த்தனை செய்ய ஏதுவாக, சென்னை எழும்பூர், சென்ட்ரல் உட்பட, முக்கிய ரயில் நிலையங்களில், ஏற்கனவே, 'ஸ்வைப மிஷின்'கள் வைக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, தமிழகம் மற்றும் கேரளாவில், கூடுதலாக, 22 ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள், சென்னை ரயில்வே கோட்டத்தில், 70 புறநகர் ரயில் நிலையங்கள் என, 92 இடங்களில், ஸ்வைப் மிஷின்கள் வைக்கப்பட்டுள்ளன. 'ஜன., 1 முதல், இந்த வசதியை பயன்படுத்துவோருக்கு, 0.5 சதவீதம் கட்டண சலுகை கிடைக்கும்; சீசன் டிக்கெட் பயணிகளுக்கும், இது பொருந்தும்' என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.