புதுடில்லி : ரூ.5000 க்கு
மேல் பழைய
ரூபாய் நோட்டுக்களை
டெபாசிட் செய்வதற்கு
விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை ரிசர்வ்
வங்கி தளர்த்தி
உள்ளது.
பழைய ரூ. 500, 1000 நோட்டுக்களை
டெபாசிட் செய்வதற்கு
புதிய கட்டுப்பாடு
ஒன்றைய சமீபத்தில்
ரிசர்வ் வங்கி
அறிவித்தது. அதன்படி, பழைய ரூபாய் நோட்டுக்களை
வங்கிகளில் டெபாசிட் செய்பவர்கள், ரூ.5000 மட்டுமே
டிபாசிட் செய்ய
முடியும். அதற்கு
மேல் டிபாசிட்
செய்யப்பட்டால், அது குறித்து உரிய விளக்கம்
அளிக்க வேண்டும்
என தெரிவிக்கப்பட்டது.
இந்த கட்டுப்பாட்டை
தளர்த்துவதாக ரிசர்வ் வங்கி இன்று அறிவித்துள்ளது.
இந்த புதிய
அறிவிப்பின்படி, கேஒய்சி விபரங்களை முழுமையாக அளித்தவர்கள்
ரூ.5000 க்கு
மேல் டெபாசிட்
செய்யலாம். கேஓய்சி விபரங்களை அளிக்காதவர்கள் ஒருமுறை
ரூ.5000 மட்டுமே
டெபாசிட் செய்ய
முடியும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.