
பிப். முதல் வாரத்தில்
பிளஸ் 2 செய்முறைத்தேர்வு | பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் அடுத்த ஆண்டு மார்ச்
3-ம் தேதி தொடங்கி 31-ம் தேதியும், எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுகள் மார்ச்
8-ல் தொடங்கி 30-ம் தேதி வரையும் நடக்கவுள்ளன. பிளஸ் 2-வில் கணிதம் மற்றும்
அறிவியல் பிரிவு மாணவர் களுக்கும் (ஒரு பாடத்துக்கு 50 மதிப்பெண்)
அதேபோல், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவி யல் பாடத்துக்கும் (25
மதிப்பெண்) செய்முறைத்தேர்வு உண்டு. பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணை
வெளியிடப்பட்டுள்ள நிலையில், செய்முறைத்தேர்வுகள் எப்போது நடத்தப்படும்
என்ற எதிர் பார்ப்பு தேர்வெழுத உள்ள மாணவர் கள் இடையே எழுந்துள்ளது.
இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந் தராதேவியிடம் கேட்டபோது,
"பிளஸ் 2 செய்முறைத்தேர்வை பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கி 3-வது
வாரத்துக்குள்ளாகவும் அதேபோல், 10-ம் வகுப்பு செய்மு றைத்தேர்வை பிப்ரவரி
3-வது வாரம் முதல் மார்ச் 5-ம் தேதிக்குள் நடத்தி முடிக்கவும் மாவட்ட
முதன்மை கல்வி அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளோம்" என்று தெரிவித்தார்.