பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு : கூடுதல் விடுமுறை

 'பிளஸ் 2வுக்கு, மார்ச் 2 முதல், 31 வரையும்; 10ம் வகுப்புக்கு, மார்ச் 8 முதல், 30 வரையும், பொதுத் தேர்வுகள் நடக்கும்' என, அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பிளஸ் 2 தேர்வு, மார்ச் மாதத்திலும்; 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, ஏப்ரல் இரண்டாவது வாரம் வரையும் நடப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு, இரண்டு வகுப்புகளுக்கும், மார்ச்சிலேயே பொதுத்தேர்வு முடிகிறது. அதனால், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிந்து, முடிவுகள் வெளிவரும் வரை, 50 நாட்கள் விடுமுறை கிடைக்கும்.



My Blogger TricksAll Blogger TricksLatest Tips and Tricks