நீதிபதிகளுக்கான நேர்முக உதவியாளர் பணி நேர்காணல் 10ம் தேதி தொடக்கம்

நீதிபதிகளுக்கான நேர்முக உதவியாளர் பணி நேர்காணல் வரும் 10ம் தேதி தொடங்கும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்ட அறிவிப்பு: 

சென்னை உயர்நீதிமன்றப் பணிகளில் அடங்கிய நீதிபதிகளுக்கான நேர்முக உதவியாளர்-92, பதிவாளர்களுக்கான நேர்முக உதவியாளர்-7 மற்றும் துணைப்பதிவாளர்களுக்கான நேர்முக எழுத்தர்-2 ஆகிய பதவிகளுக்கு கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இதில் 310 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.

தேர்வில் விண்ணப்பதாரர் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் பதவிக்கான அந்த அறிவிப்பில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் நேர்காணலுக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட 178 பேரின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.   இதற்கான நேர்காணல் வருகிற ஜனவரி 10, 11, 12 ஆகிய நாட்களில் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.