10ம் வகுப்பு தேர்வு : 26 முதல் விண்ணப்பம்

தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி அறிக்கை: வரும் மார்ச்சில் நடக்கும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு, தனித்தேர்வர்கள், டிச., 26 முதல், ஜன., 4 வரை விண்ணப்பிக்கலாம். கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள, அரசு தேர்வுத் துறையின் சேவை மையங்களுக்கு சென்று, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழ் மொழியை மட்டுமே, முதல் மொழிப் பாடமாக தேர்வு செய்ய வேண்டும். விண்ணப்பிக்கும் முறை, சேவை மைய முகவரி குறித்து, http:/www.dge.tn.govஎன்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.