ஆசிரியர் நியமன விவரங்களை இணையத்தில் வெளியிட தயார்: துணைவேந்தர் கே. பாஸ்கர்

சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற ஆசிரியர் நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக மூட்டா அமைப்பினர் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இதுகுறித்து, துணைவேந்தர் கே. பாஸ்கர் கூறியது: ஆசிரியர் நியமனத்தில் எந்தவித முறைகேடுகம் நடைபெறவில்லை. அனைத்தும் ஒளிவுமறைவின்றி நடைபெற்றுள்ளது. தமிழக அரசால் நியமிக்கப்பட்ட 9 பேர் கொண்ட கமிட்டி மூலமே அனைத்து நியமனங்களும் நடைபெறுகிறது. காலியாகவுள்ள 54 பணியிடங்களில் இதுவை 27 பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
இதற்கு, ஆட்சிமன்றக் குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது.
தேவையெனில், நியமன நடவடிக்கைகள் தொடர்பான அனைத்து விவரங்களையும் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடத் தயாராகவுள்ளோம்.
தேர்வுக்கு அதிகம் பேர் வந்திருந்ததால் பணி கிடைக்காத நபர்கள் கூறும் பொய்ப் புகாரில் தேவையற்ற வதந்திகள் உலா வருகின்றன. இதில், துளியளவும் உண்மையில்லை என்றார் அவர்.