தியானம்,யோகா செய்த பலனை தரும் தமிழ் மந்திரம்

யோகா ,தியானம் செய்வதால் ஒவ்வொரு உடல் உறுப்புகளும் புத்துணர்வு பெறுகின்றன..அது போன்ற அனுபவத்தை மந்திரங்களை படிப்பதாலும் ,சொல்வதாலும் பெற முடியும்...
தினசரி காலை ,மாலை கந்த சஷ்டி கவசம் படித்தால் தியானம்,யோகம் செய்த பலன்கள் கிடைக்கும்..பொறுமையாக அதனை உணர்ந்து படிக்க வேண்டும்.கதிர்வேல் இரண்டும் கண்ணினை காக்க எனும் வரிகளை படிக்கும்போது உங்கள் கண்கள் பாதுகாப்பு அடைந்ததை போல உணர வேண்டும்...
ஒவ்வொரு அங்கத்தினையும் முருகனின் வேல் காப்பது போல அமைந்த கந்த சஷ்டி கவசத்தை படிக்கும்போது ,மனது தியானிக்கும் அங்கத்தினை நமது மூளை தானாகவே ஒரு சில வினாடிகள் கூர்ந்து கவனிக்கிறது.
இதனால் மூளையின் தனிச்சிறப்பு கவனத்திற்கு அதாவது சிறப்பு பாதுகாப்பு நம் மூளையின் உத்தரவால் அந்த அங்கம் பெறுகிறது.இதனால் முழு ஆரோக்கியத்துடன் வாழ முடியும்

if you read SKANDHA SASTI KAVACHAM daily in the morning and evening,you will get the benefit of meditation,for this you should read slowly with steady mind.
While reading Kathirvel erandum kann inai kaaka, you should feel like your eyes are safeguarded. While reading this,You should also feel that every part of your body is safeguarded.
When reading this,our soul is watching everypart of our body and our brain is keenly watching this for few seconds,because of this,our body's internal parts are getting special care as per our mind's order,because of this,we can live with complete health.

முருகனையே குருவாய் வந்து அருள சொல்லி கேட்கும் அருமையான குரு மந்திரம்.தினசரி இதை படிக்க குரு அருள் மட்டுமல்ல முருகனருளும் கிடைக்கும்...தமிழ் மந்திரம் நோய்களை போக்கும் வறுமையை ஒழிக்கும்...
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!


குழந்தைகளை இந்த மந்திரம் தினசரி படிக்க சொன்னால் நாக்குக்கும் ,மனதுக்கும், நினைவாற்றலுக்கும் நல்ல பயிற்சி கிடைக்கும்.