பள்ளிக்கல்வித்
துறை அறிமுகம் செய்துள்ள, போட்டித் தேர்வு வகை வினாத்தாள்படி,
10ம் வகுப்புக்கும், மாதிரி தேர்வு வைக்க,
அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அரசு
பள்ளி மாணவர்கள், 'நீட், ஜே.இ.இ.,' போன்ற
நுழைவுத்
தேர்வுகளிலும், தங்கள் திறனை காட்டும்
வகையில், அவர்களுக்கு புதிய வினாத்தாள் முறையை,
கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது.
தமிழக அரசின் குழந்தைகள் தின
விழாவில், இதற்கான அறிவிப்பை, பள்ளிக்கல்வி
செயலர் சபிதா வெளியிட்டார். இதன்படி,
எட்டாம் வகுப்பு வரை, அனைத்து
மாணவர்களுக்கும், புதிய, 'அப்ஜெக்டிவ்' வகை
வினாத்தாள் மூலம், பாட வாரியாக
மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. வினாத்தாளில் உள்ள நான்கு விடைகளில்,
சரியானதை தேர்வு செய்வது, மாணவர்களின்
தேர்வு பயத்தை போக்குவதோடு, குழப்பமான
வினாவுக்கும், விடை கண்டுபிடிக்கும் பக்குவத்தையும்
ஏற்படுத்துவது தெரிய வந்துள்ளது. எனவே,
இந்த வினாத்தாள் முறைப்படி, 10ம் வகுப்பு பொதுத்
தேர்வு மாணவர்களுக்கும், மாதிரி தேர்வு வைக்க,
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன
அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். வரும் ஆண்டுகளில், பிளஸ்
2 வரையிலும், இந்த முறை தேர்வு
அறிமுகம் செய்யப்பட உள்ளது.