எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனைக்கு மத்திய அரசு இசைவு


எத்தனால் கலந்த பெட்ரோலை விற்பனை செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் பல்வேறு திட்டங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டன. இதில் குறிப்பாக எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டில் பெட்ரோலிய பொருட்களின் பயன்பாடு பலமடங்கு உயர்ந்து இருப்பதால் அதிக அளவில் இறக்குமதி செய்ய வேண்டி உள்ளது. இதனால் செலவு அதிகரித்தது. இதை கட்டுப்படுத்த எத்தனாலை பெட்ரோலில் கலந்து விற்பனைக்கு அனுப்பி வைக்க மத்திய அரசு முடிவு செய்தது.
அதே போல ஜம்முவில் ஐஐஎம் தொடங்கவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.