தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு துவங்கியது

சென்னை: தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு இன்று காலை துவங்கியது.
வரும் 29ம் தேதி சனிக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளை தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் அறிவித்தது.
அதன்படி, அக்டோபர் 26, 27, 28 ஆகிய 3 நாட்களுக்கு சென்னையில் இருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு 11,225 அரசுப் பேருந்துகள் இயக்கப்படும்.
அதோ போல, தமிழகத்தின் இதர பகுதகளில் இருந்து 10,064 அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துக் கழகம் அறிவித்தது.
இந்த சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு இன்று காலை தொடங்கியது.