சென்னை: பழைய ஓய்வூதிய திட்டம், மத்திய அரசு ஊதியம் உள்ளிட்ட
கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒருங்கிணைந்த போராட்டங்களில் ஈடுபட,
பத்திரப்பதிவுத் துறை அலுவலர்கள் ஆலோசித்து வருகின்றனர்.
இது குறித்து, தமிழ்நாடு பதிவுத் துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:ஓய்வூதியம், மத்திய அரசுக்கு நிகரான ஊதியம் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற, தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து குரல் எழுப்பினால், சங்க நிர்வாகிகளை பொய்யான காரணம் கூறி, 'சஸ்பெண்ட்' செய்கின்றனர். எனவே, பதிவுத் துறை அலுவலர் சங்கம், அனைத்து துறை அலுவலர் சங்கங்களுடன் ஆலோசனை நடத்த உள்ளது. அதன் பின், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், போராட்ட அறிவிப்புகள் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து, தமிழ்நாடு பதிவுத் துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:ஓய்வூதியம், மத்திய அரசுக்கு நிகரான ஊதியம் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற, தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து குரல் எழுப்பினால், சங்க நிர்வாகிகளை பொய்யான காரணம் கூறி, 'சஸ்பெண்ட்' செய்கின்றனர். எனவே, பதிவுத் துறை அலுவலர் சங்கம், அனைத்து துறை அலுவலர் சங்கங்களுடன் ஆலோசனை நடத்த உள்ளது. அதன் பின், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், போராட்ட அறிவிப்புகள் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.