ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு

கோவையில், அடுத்த மாதம், 19 முதல், 23 வரை, பிராந்திய ராணுவத்திற்கு, ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. கோவை, பி.ஆர்.ஆஸ்., மைதானத்தில் முகாம் துவங்குகிறது. அக்., 19 காலை, 6:00 மணிக்கு, உடல் தகுதித்தேர்வு நடைபெறும். இம்முகாமில், ஆந்திரா, குஜராத், கேரளா, தமிழகம், ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்கள் மற்றும் டாமன் டையு, லட்சத்தீவு, புதுச்சேரி யூனியன்
பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளலாம். இதில், தேசிய மாணவர் படையைச் சேர்ந்தவர்கள், விளையாட்டு வீரர்கள், சமையலர்கள், கொத்தனார்கள், ஓவியர்கள், ஓட்டுனர் உரிமம் வைத்திருப்போர், மர வேலை செய்வோர் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வயது, 18 முதல், 42க்குள் உள்ளோர் முகாமில் பங்கேற்கலாம்.