பழைய ஓய்வூதியத் திட்டம் தொடருமா?: தலைமைச் செயலகத்தில் இன்று கருத்துக் கேட்புக் கூட்டம்

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தையேநடைமுறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்டவல்லுநர் குழுவின் முதல் கூட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.தலைமைச் செயலகத்தில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் இந்தக்கூட்டத்தில் பல்வேறு அரசு ஊழியர்கள்-ஆசிரியர் சங்கங்களைச்சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்கடந்த சட்டப் பேரவைத்தேர்தலின் போது,
அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில்பழையஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்துவது குறித்து ஒரு வல்லுநர்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும்அந்தக் குழுவின் அறிக்கைபெறப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டமே தொடர்ந்திட நடவடிக்கைஎடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
புதியதாக குழுதமிழக அரசு அமைத்துள்ள குழுவின் தலைவராக,முதல்வர் அலுவலக சிறப்புப் பணி அலுவலர் சாந்தா ஷீலா நாயர்நியமிக்கப்பட்டுள்ளார்உறுப்பினர்களாக நிதித் துறை கூடுதல்தலைமைச் செயலாளர் கே.சண்முகம்சென்னை பொருளாதாரபள்ளியின் பேராசிரியர்கள் கே.வி.பார்த்தசாரதிலலிதாசுப்பிரமணியம் ஆகியோரும்குழுவின் உறுப்பினர் செயலாளராகதிட்டம்-வளர்ச்சி-சிறப்பு முயற்சிகள் துறையின் முதன்மைச்செயலாளர் எஸ்.கிருஷ்ணனும் நியமிக்கப்பட்டிருந்தனர்இந்தநிலையில்பேராசிரியர்கள் பார்த்தசாரதிலலிதா சுப்பிரமணியம்ஆகியோர் குழுவில் தாங்கள் தொடர முடியாது என அரசுக்குத்தெரிவித்தனர்இதையடுத்துசென்னை பொருளாதார பள்ளியின்மற்றொரு பேராசிரியரான டாக்டர் பிரிஜேஷ் சி.புரோகித்நியமிக்கப்பட்டார்.
முதல் கூட்டம்தமிழக அரசின் வல்லுநர் குழு புதிதாகமாற்றியமைக்கப்பட்ட நிலையில்அந்தக் குழுவின் முதல் கூட்டம்தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை (செப். 15) பிற்பகல் 3மணிக்கு நடைபெறவிருக்கிறதுஇதுதொடர்பாகவல்லுநர் குழுவின்உறுப்பினர் செயலாளரும்முதன்மைச் செயலாளருமானஎஸ்.கிருஷ்ணன் சார்பில் அனைத்து அரசு ஊழியர்கள்ஆசிரியர்சங்கங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவதுவல்லுநர் குழுவின் கூட்டம்தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டடத்தின் இரண்டாவதுதளத்தில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும்இந்தக் கூட்டத்தில்தங்களது கருத்துகளை அரசு ஊழியர்கள் சங்கங்கள் தெரிவிக்கலாம்.இதற்காகசங்கத்தின் 3 பிரதிநிதிகள் மட்டுமே கலந்து கொள்ளவேண்டும்மேலும்கருத்துக் கேட்பு கூட்டத்தின் போது நேரத்தைசிறப்பான முறையிலும்உரிய வகையிலும் பயன்படுத்த ஏதுவாகஎழுத்துப்பூர்வமாகவும் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று தனதுகடிதத்தில் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.