தமிழகத்தில் புதிதாக ஐந்து வருவாய் வட்டங்கள் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

தமிழகத்தில் கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம் வட்டங்களை பிரித்து ஜமீன் கயத்தார் உட்பட 5 வருவாய் வட்டங்களை உருவாக்கி முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

 
           இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,தமிழகத்தில் புதிதாக ஐந்து வருவாய் வட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம் பிரித்து ஜமீன் கயத்தார், காட்டுமன்னார்கோயில் பிரித்து ஸ்ரீமுஷ்ணம், திருப்பத்தூர் பிரித்து சிங்கம்புணரி, உடையார்பாளையம் பிரித்து ஆண்டிமடம், நீடாமங்கலம் பிரித்து கூத்தாநல்லூர் ஆகிய வட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ள என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.