மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள், தங்கள் ஓய்வூதியம் பற்றிய நிலையை அறிந்து கொள்ள புதிய இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளது. அத்துடன் எஸ்எம்எஸ் சேவையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் ஓய்வூதியதாரர்களின் வசதிக்காகபுதியஇணையதளத்தைமத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி டெல்லியில்இன்று தொடங்கி வைத்தார். ‘www.cpao.in’ என்ற முகவரியில்ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஓய்வூதியம் பற்றிய நிலையை அறிந்துகொள்ளலாம்அத்துடன் குறைகள் தொடர்பான புகார்களில்
எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளையும் இந்த இணையதளத்தில்தெரிந்து கொள்ளலாம்மேலும்எஸ்எம்எஸ் மூலம் ஓய்வூதியம்பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.
மொபைல் போன் மூலமாகவே புகார்களை அனுப்பலாம்அதன் மீதுஉடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்அவர்களுக்கு எஸ்எம்எஸ்மூலம் பதில் தகவலும் அனுப்பப்படும்இதன்மூலம் 11.61 லட்சம்மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள்குடும்ப ஓய்வூதியதாரர்கள்,சுதந்திரப் போராட்ட தியாகிகள் பலன் அடைவார்கள் என்று அருண்ஜேட்லி கூறினார்.
புதிய இணையதளம் மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளால்தேவையில்லாமல் ஓய்வூதியதாரர்கள் அலைக்கழிக்கப்படுவது,மனவேதனை அடைவது தடுக்கப்படும்இனிமேல் ஓய்வூதியதாரர்கள்எந்த துன்பமும் படக்கூடாதுஏனெனில்அவர்கள் நமது நாட்டின்மூத்த குடிமக்கள்அவர்களுக்கு ஓய்வூதியம் மிக முக்கியம்அதைசார்ந்துதான் அவர்கள் இருக்கின்றனர் என்று ஜேட்லி தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் கணக்கு தணிக்கைத் துறை தலைவர் எம்.ஜே.ஜோசப்பேசும்போது, ‘‘இந்த புதிய இணையதளம் ஓய்வூதியதாரர்களின்குறைகளை தீர்த்து வைப்பதில் வெளிப்படை தன்மை மற்றும்நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இருக்கும்’’ என்றார்.