மத்திய அரசின்
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி, எட்டாம் வகுப்பு வரை தேர்வே நடத்தாமல்,
'ஆல் பாஸ்' திட்டம் நடைமுறையில் உள்ளது.
சில பள்ளிகளில் மட்டும் பெயரளவில்
பருவத்தேர்வு நடத்தப்படுகிறது. பருவத்தேர்வு வினாத்தாளை அந்தந்த பள்ளிகளே
தயாரித்து கொள்கின்றன; சில இடங்களில், உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்கள்
தயாரிக்கின்றன.
கோவை
மாவட்டத்தில், சிறுவர் கலா மன்றத்தின் சார்பில், முதலாம் பருவ தேர்வுக்கான
ஐந்தாம் வகுப்பு வினாத்தாள் தயாரிக்கப்பட்டு, பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது.
இந்த வினாத்தாள் தேர்வு நடக்கும் முன், விற்கப்பட்டுள்ளதாக புகார்
எழுந்துள்ளது.