புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு: 50 ஆயிரம் பேரிடம் கையெழுத்து பெற முடிவு

புதிய கல்விக் கொள்கையால் ஏற்படும் பாதிப்பு குறித்து மக்கள்அறிந்து கொள்ளும் வகையில்கையெழுத்து இயக்கம் நடத்ததமிழ்நாடு கல்வி உரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு முடிவுசெய்துள்ளது.
இக்கூட்டமைப்பின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நாமக்கல்லில்செவ்வாய்க்கிழமை நடைபெற்றதுஅமைப்பாளர் செல்வராசன்தலைமை
வகித்தார்மாவட்ட நிதிக் காப்பாளர் பழனிவேலு முன்னிலைவகித்தார்தமிழ்நாடு உயர்நிலைமேல்நிலைப் பள்ளி பட்டதாரிஆசிரியர் கழக மாவட்டச் செயலர் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.

நிறைவேற்றப்பட்ட
தீர்மானங்கள்புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காகமத்திய அரசு வெளியிட்டுள்ள முன்மொழிவுகளின் மீது பொதுமக்கள்கருத்து கூறுவதற்கு டிசம்பர் மாதம் வரை கால அவகாசம் அளிக்கவேண்டும்மத்தியமாநில அரசுகள் நாடு முழுவதும் விரிவானஅளவில் புதிய கல்விக் கொள்கையின் மீது கருத்துக் கேட்புகூட்டங்களை நடத்த வேண்டும்.
கல்வியை மத்திய அரசின் பொதுப் பட்டியலில் இருந்து மாநிலஅரசுகளின் பட்டியலுக்கு மாற்றிடும் வகையில் உரிய சட்டத் திருத்தம்மேற்கொள்ளப்பட வேண்டும்மத்திய அரசு தேசிய மொத்தஉற்பத்தியில் கல்விக்கு 6 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.தமிழக அரசு மாநில வரவுசெலவு அறிக்கையில் கல்விக்கு 30சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

புதிய கல்விக் கொள்கையால் ஏற்படும் ஆபத்துகள் குறித்துபொதுமக்களிடம் எடுத்துக் கூறும் வகையில் வரும் 18-ஆம் தேதிமுதல் 28-ஆம் தேதி வரை நாமக்கல் மாவட்டத்தில் 50 ஆயிரம் பேரிடம்கையெழுத்து பெறும் நோக்கில் கையெழுத்து இயக்கம் நடத்துவதுஉள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டனஇந்திய மாணவர் சங்கமாவட்டச் செயலர் ஜோதிபாசு நன்றி கூறினார்.