தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 தேர்வுக்கு 12¾ லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 தேர்வுக்கு 12¾ லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் 

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நேற்று கடைசி நாள். மொத்தம் 12¾ லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் பட்டதாரிகள் ஆவார்கள். 
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 தேர்வு மூலம் 5,451 இளநிலைப்பணியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளது. இதற்காக www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவேண்டும் என்றும் விண்ணப்பிக்க எஸ்.எஸ்.எல்.சி.படித்திருந்தால் போதும் என்றும் அறிவித்து இருந்தது. அதுபோல இணையதளத்தில் ஏராளமானவர்கள் குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பித்தனர். விண்ணப்பிக்க கடந்த 8-ந்தேதி கடைசி என்று இருந்தது. ஆனால் அரசு பணியாளர் தேர்வாணையத்தில் விண்ணப்பிக்க விரும்பினார்கள். ஆனால் சர்வர் வேலை செய்யவில்லை. எனவே விண்ணப்பிக்கும் தேதியை தள்ளிவைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தேதி நீட்டிப்பு அவர்கள் கோரிக்கை விடுத்தது போல 14-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் அதன் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா அறிவித்தார். மேலும் தேர்விற்கான கட்டணம் செலுத்த 16-ந்தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். இதையொட்டி விண்ணப்பிக்க ஆன்லைனில் விண்ணப்பிக்க எளிதில் இணையதளம் கிடைத்தது. 12¾ லட்சம் பேர் விண்ணப்பித்தனர் விண்ணப்பிக்க நேற்று கடைசி நாள். மொத்தம் 12¾ லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். அதாவது ஒரு காலிப்பணியிடத்திற்கு 234 பேர் தேர்வு எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலானவர்கள் பட்டதாரிகள்.