தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் உருவாகிய குறைந்த காற்றழுத்தம், தெலங்கானா அருகே மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாக மாறியுள்ளதால் தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் பரவலாக மழை பெய்துள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.