மத்திய அரசு ஊழியர்களுக்கு இரண்டு வருட போனஸ்

விவசாயம் சாராத தொழிலாளர்கள் குறைந்த பட்ச தினக்கூலியை ரூ.246லிருந்து ரூ.350 ஆக உயர்த்த வேண்டுமென்ற நிபுணரின் அறிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். மேலும் அவர், மத்திய அரசு ஊழியர்களுக்கு, நிலுவையில் உள்ள மாற்றியமைக்கப்பட்ட இரண்டு வருட போனஸ் வழங்கப்பட உள்ளதாகவும் கூறினார். தொழிலாளர் ஒப்பந்த சட்டம் மீதான புகார்கள் குறித்து அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு கடிதம் எழுத உள்ளதாக பத்திரிகையாளர் சந்திப்பின் போது ஜெட்லி கூறினார்.

7 வது சம்பள கமிஷன் அறிக்கை அடிப்படையில், அடிப்படை சம்பளம் ரூ. 18 ஆயிரமாக நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் வெள்ளிக்கிழமை நாடு தழுவிய ஸ்டிரைக்கிற்கு தொழில்ற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இதனால், வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பணிகள் பாதிக்கப்படுவதுடன், பொது மக்கள் பாதிப்புக்குள்ளாவார்கள்.