டி.பார்ம்., படிப்புக்கு நாளை கலந்தாய்வு

டிப்ளமோ இன் பார்மசி, போஸ்ட் பேசிக் பி.எஸ்சி., நர்சிங் படிப்புகளுக்கான கலந்தாய்வு, நாளைநடக்கிறது.தமிழகத்தில், 'டிப்ளமோ இன் பார்மசி' படிப்புக்கு, அரசு கல்லுாரிகளில், 240 இடங்கள் உள்ளன. டி.பார்ம்., முடித்தோர், இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேரும், பி.பார்ம்., மற்றும் டிப்ளமோ நர்சிங் முடித்தோர், இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேரும், 'போஸ்ட் பேசிக்' பி.எஸ்சி., படிப்புகளுக்கு அரசு மற்றும் சுயநிதி கல்லுாரிகளில், 1,300 இடங்கள் உள்ளன.
இதற்கு, 6,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ள நிலையில், மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நாளை நடக்கிறது. போஸ்ட் பேசிக் பி.எஸ்சி., படிப்புக்கு, 10ம் தேதியும் கலந்தாய்வு தொடர்கிறது. மேலும் விபரங்களை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் அறியலாம்.