அரசு பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும்
அதிகாரிகள், தமிழில் பெயர் எழுத வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.
துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெபத்துரை என்ற தமிழ் ஆர்வலர், பள்ளிக்
கல்வித் துறைக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
இதைத்தொடர்ந்து, தொடக்கப் பள்ளி இயக்குனர்
இளங்கோவன் அனுப்பிய சுற்றறிக்கையில், 'தொடக்கக் கல்வித் துறையில்
பணியாற்றும் அதிகாரிகள் முதல், ஊழியர்கள் வரை அனைவரும், தங்கள் பெயரை
தமிழில் எழுதுவதுடன், இனிஷியலையும், தமிழிலேயே எழுத வேண்டும்' என,
உத்தரவிட்டுள்ளார். தமிழில் எழுதாதது, அரசு விதிகளுக்கு முரணானது என்றும்
அவர் தெரிவித்துள்ளார்.