சென்னையில் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும்: முதல்வர் அறிவிப்பு

சென்னை: சென்னையில் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் இன்று அறிவித்துள்ளார்.

சென்னை அருகே பெரும்பாக்கத்தில் அரசினர் கலைக் கல்லூரி ரூ.8.48 கோடியிலும், மேட்டுபாளையத்தில் அரசு கலைக்கல்லூரி ரூ.8.29 கோடியில் தொடங்கப்படும் என்றும் தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
விழுப்புரம், நீலகிரியில் ரூ.12 கோடியில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைகழகத்தில் மண்டல மையம் அமைக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.