மத்திய
அரசு ஊழியர் மகா சம்மேளன
பொதுச் செயலாளர் துரைப்பாண்டியன் சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை
சந்தித்தார்.
அப்போது
அவர் கூறியதாவது,
மத்திய
அரசு ஊழியர் மகாசம்மேளனத்தின் வைர
விழாவையொட்டி அகில இந்திய மாநாடு
வருகிற 16-ந் தேதி முதல்
18-ந் தேதி வரை சென்னை
புரசைவாக்கம் தர்மபிரகாஷ் மண்டபத்தில் நடக்கிறது. இதில் 105-க்கும் மேற்பட்ட மத்திய
அரசு துறைகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட சங்க
பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
விலைவாசி
உயர்வு, பொதுத் துறை நிறுவனங்களை
தனியார் மயமாக்குதல், வங்கிகள் தனியார் மயம் உள்ளிட்டவற்றை
கண்டித்தும், மத்திய அரசு ஊழியர்களுக்கு
குறைந்தபட்ச ஊதிய உயர்வு வழங்க
கோரியும் வருகிற செப்டம்பர் 2-ந்
தேதி அகில இந்திய அளவில்
வேலை நிறுத்தம் நடக்கிறது. இதில்நாடு முழுவதும் 2.15 கோடி பேர் பங்கேற்கிறார்கள்.
தமிழ்நாட்டில் மகாசம் மேளனம் சார்பில்
33 லட்சம் அரசு ஊழியர்கள் பங்கேற்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்