மாத வருமானம் பெறுவோர் உள்ளிட்ட பல்வேறு
தரப்பினர், ஜூலை, 31ம் தேதிக்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய
வேண்டும். அதற்கு வசதியாக, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான
வரித்துறை தலைமையகத்தில், ஏழு சிறப்பு கவுன்டர்கள், இன்று
திறக்கப்படுகின்றன.
இவற்றை, வருமான வரித்துறை முதன்மை, தலைமை
ஆணையர் ஏ.கே.ஸ்ரீவஸ்தவா திறந்து வைக்கிறார். இவை, ஞாயிற்றுக் கிழமை வரை
அலுவலக நேரங்களில் செயல்படும்.
அதுமட்டுமின்றி, வருமான வரிக்கணக்கு தாக்கல்
செய்வதற்கான அங்கீகரிக்கப்பட்ட முகவர்களும் அங்கு இருப்பர். அவர்களிடம்,
200 ரூபாய் செலுத்தி, வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்யலாம்