மருத்துவ படிப்பு தரவரிசை மாற்றம்

மருத்துவ படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு முடிந்துள்ளது. மறு திருத்த மதிப்பெண் அடிப்படையில், தரவரிசையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு, ஜூன், 25ல் முடிந்தது. அரசு மருத்துவக்
கல்லுாரிகளில் அனைத்து இடங்களும் நிரம்பின. பி.டி.எஸ்., படிப்பில், ஏழு இடங்கள் மீதம் உள்ளன. சுய நிதி கல்லுாரிகளில், 72 எம்.பி.பி.எஸ்., - 970 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. இரண்டாம் கட்ட கலந்தாய்வு, இம்மாத இறுதியில் நடக்க உள்ளது. கலந்தாய்வில் பங்கேற்ற, 639 பேர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். இதுதவிர, 15 ஆயிரம் பேர் தரவரிசையில் உள்ளனர். இந்நிலையில், பிளஸ் 2 மறு கூட்டல், மறு திருத்தத் தில், 16 மாணவ, மாணவி யரின் மதிப்பெண்கள் மாறுபட்டுள்ளன. தேர்வுத்துறை இயக்ககம் கொடுத்த தகவலை அடுத்து, மருத்துவக் கல்வி இயக்ககம், புதிய மதிப்பெண் அடிப்படையில் தரவரிசையில் மாற்றம் செய்துள்ளது.
இதுகுறித்து, மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர் செல்வராஜ் கூறுகையில், ''முதற்கட்ட கலந்தாய்வில், திருத்திய மதிப்பெண், மறு கூட்டல் மதிப்பெண்படி, 60 பேரின் தரவரிசை மாறியது. மேலும், 16 பேரின் புதிய மதிப்பெண் கிடைத்துள்ளதால், தர வரிசையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ''இதுபற்றிய விவரங்களை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இரண்டாம் கட்ட கலந்தாய்வு தேதி, விரைவில் வெளியிடப்படும்,'' என்றார்.