தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு : ஆக.3ம் தேதி துவக்கம்.

நாமக்கல் மாவட்டத்தில் தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு இடமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு, ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி துவங்குகிறது. இது குறித்து, நாமக்கல் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் இந்திரா காந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:


நாமக்கல் மாவட்டத்தில் தொடக்கக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களின் பொது மாறுதல் கலந்தாய்வு, நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவியிலிருந்து, உதவி தொடக்கக் கல்வி அலுவலராக பணி மாறுதல் கலந்தாய்வு மற்றும் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்விற்கான கலந்தாய்வு, வரும் ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி முதல் நாமக்கல் ஆர்.சி நடுநிலைப் பள்ளியில் நடக்கிறது.
அதன்படி, 3ம் தேதி உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களின் பொது மாறுதல் கலந்தாய்வு, 4ம் தேதி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் இருந்து உதவி தொடக்ககல்வி அலுவராக பதவி உயர்வு கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடக்கிறது. 6ம் தேதி நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு, பட்டதாரி ஆசிரியருக்கான பணி நிரவல், பொது மாறுதல் (ஒன்றியத்துக்குள்), பதவி உயர்வு மற்றும் பட்டதாரி ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு- மாவட்டத்துக்குள் (ஒன்றியம் விட்டு ஒன்றியம்) ஆகியவை நடக்கிறது.
7ம் தேதி தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு ஆகியவை நடக்கிறது. 13ம் தேதி இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வும், 14ம் தேதி பொது மாறுதல் கலந்தாய்வு - ஒன்றியத்துக்குள், இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு - மாவட்டத்துக்குள் (ஒன்றியம் விட்டு ஒன்றியம்) நடக்கிறது. 20ம்தேதி பட்டதாரி ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு - மாவட்டம் விட்டு மாவட்டம், 21ம் தேதி இடைநிலை ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு - மாவட்டம் விட்டு மாவட்டம் நடக்கிறது. குறிப்பிட்ட நாளில் நடைபெறும் கலந்தாய்வில் விண்ணப்பித்தவர்கள் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட தொடக் கல்வி அலுவலர் இந்திராகாந்தி தெரிவித்துள்ளார்