விரிவுரையாளர் நியமனம் 30ம் தேதி கடைசி

பள்ளிக்கல்வித் துறை கட்டுப்பாட்டிலுள்ள மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், ஆசிரியர்களின் பயிற்சி நிகழ்ச்சி நடத்துதல், புதிய பாடத் திட்டங்களை தயாரித்தல் போன்ற பணிக்கு, 272 விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இதற்கு, 15ம் தேதி முதல், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. வரும், 30ம் தேதிக்குள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.