வரும் 29ம் தேதி அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு

வங்கிகள் இணைப்பு மற்றும் தனியார் மயத்தை கண்டித்து வரும் 29ம் தேதி அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

இதனால், வங்கிச் சேவை கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.  இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளன பொதுச் செயலாளர் வெங்கடாசலம் கூறியதாவது: -
வேலைநிறுத்த போராட்டத்தில் பாரத ஸ்டேட் வங்கியைத் தவிர்த்து பிற தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் 10 தனியார் வங்கிகளின் அதிகாரிகள், ஊழியர்கள் என 3 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். அன்றைய தினம் நாடு முழுவதும் 80,000 கிளைகள் மூடப்பட்டிருக்கும்.