குரு பெயர்ச்சி 2016-2017 -குருவால் அதிக பணவரவு எந்த ராசியினருக்கு கிடைக்கும்.?

குரு பெயர்ச்சி வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வாக்கிய பஞ்சாங்கப்படி அமைகிறது அன்று ஆடி 18 ..ஆடி அமாவாசையும் ஆன நாளில் குரு கன்னி ராசிக்கு மாறுகிறார்...
குரு செல்வாக்கு கொடுக்கும் கிரகம்.சொல்வாக்கு தவறாத கிரகம்.குரு கிரகத்தின் சக்தி அதிகம் பூமியில் வெளிப்பட்ட நாளில் பிறந்தவர்கள் குருபலம் நிறைந்தவர்கள் ..அவர்கள் எப்போதும் செல்வாக்குடன் வாழ்கிறார்கள்...குரு பார்க்க கோடி நன்மை.
குரு பகவான் ஆட்சி பெற்றோ உச்சம் பெற்றோ லக்னத்திற்கோ சந்திரனுக்கோ கேந்திரத்தில் அமையப்பெற்று காணப்பட்டால் ஹம்ச யோகம் உண்டாகிறது.இந்த யோகத்தால் நல்ல உடல் அமைப்பு ,மற்றவர்களால் மதிக்கப்படும் உன்னத நிலை ,ஒழுக்கமான வாழ்வு போன்ற ஏற்றமான பலன்கள் நடைபெறும்.இப்படி ஹம்ச யோகம் பெற்றவர்களில் ஒருவர் நம் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆவார்.அவருக்கு லக்னத்துக்கு 7ல் குரு இருக்கிறார்..இதனால் அரசியலில் உய்ர்ந்த பதவி வகிக்கும் யோகம் பலமுறை உண்டானது.
குருவும் கேதுவும் இணைந்து காணப்பட்டாலும் கேதுவை குரு பார்வை செய்தாலும் அம்சத்திலும் இது போன்ற குரு கேது சேர்க்கை இருப்பின் கோடீஸ்வர யோகம் உண்டாகிறது.இதனால் வாழ்வில் திடீர் அதிர்ஷ்டம் உண்டாகி செல்வம் பலவிதத்திலும் வந்து சேரும்.இந்த யோகத்தால் சிவனருள் பெற்ற செல்வராக ஆன்மீக அன்பர்களால் இவர்கள் புகழப்படுவர்.ஆன்மீகத்திலும் இவர்கள் அதிக நாட்டம் உடையவர்களாக இருப்பர்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஜாதகத்தில் இந்த கோடீஸ்வர யோகம் அமைப்பு இருக்கிறது.கோடிக்கணக்கான மக்களின் ஆதரவும்,திருப்பதி பெருமாளின் ஆசியும் இவர் பெற்றிருக்கிறார்..
குரு ஜாதகத்தில் எந்த ராசியில் இருப்பது மிக சிறப்பு என ஜோதிடம் சொல்கிறது..? 
லக்னத்தில் குரு இருப்பதுதான் மிக சிறப்பானதாக சொல்கிறது குரு லக்னத்தில் இருந்தால் 5,7,9 ஆம் இடங்களை பார்வை செய்வார் இதனால் புண்ணிய செயல்கள் அதிகம் செய்வர்...நல்ல மனைவி நல்ல புத்திரன் அமையும்...சொத்துக்கள் சேர்க்கை உண்டாக்கும்.லக்னத்தில் குரு இருப்பது எந்த லக்னத்துக்கும் கேந்திராதிபத்திய தோசம் இல்லை.
ஒருவர் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் குரு அமையப்பெற்றால் தீர்க்க ஆயுள்,நல்ல செல்வம்,செல்வாக்கு ,சிறப்பான புத்திர பாக்யம்,அரசு வழியில் அனுகூலம்,தெய்வீக ஆன்மீக துறையில் நாட்டம் உண்டாகும்.
குருவால் உண்டாகும் யோகங்களில் முக்கியமானது கெஜகேசரி யோகம்.சந்திரனுக்கு கேந்திர ஸ்தானமாகிய 4,7,10ல் குரு அமையப்பெற்றால் கெஜகேசரி யோகம் உண்டாகிறது..கஜம் எனில் யானை கேசரி எனில் சிங்கம்.பல யானைகளுக்கு மத்தியில் சிங்கம் போல இந்த யோகம் அமையப்பெற்றவர்கள் வலிமை உள்ளவர்களாக திகழ்வார்கள்..இதனால் ஜாதகத்தில் உள்ள மற்ற தோசங்கள் விலகி வழிவிடுமாம்.
2016-2017 குரு பெயர்ச்சியால் அதிக பண வரவு யாருக்கு கிடைக்கும் எனில் ,
குரு பார்வை யார் ராசிக்கெல்லாம் தன ஸ்தானம்,பாக்யஸ்தானத்தை பார்க்கிறது என பார்ப்போம்...
குரு கன்னியில் இருந்து 5ஆம் பார்வையாக மகரம் ராசியை பார்க்கிறது.அது தனுசு ராசியினருக்கு தன ஸ்தானம் ஆகும்.
ஏழாம் பார்வையாக மீனம் ராசியை பார்க்கிறது அது கும்ப ராசியினருக்கு தன ஸ்தானம் ஆகும்...
ஒன்பதாம் பார்வையாக ரிசபம் ராசியை பார்க்கிறது அது மேசம் ராசியினருக்கு தன ஸ்தானமாகும்.
ஆக,குரு பார்வை பெறும் தனுசு ,கும்பம்,மேசம் ராசியினருக்கு நல்ல தன வரவு இருக்கும்.
லாபஸ்தானத்தை குரு பார்வை செய்யும் ராசியினர் யார் என பார்ப்போம்..
விருச்சிகம் ராசியினருக்கு லாபத்தை குரு பார்க்கிறார்
ரிசபம் ராசியினரின் லாபத்தை குரு பார்வை செய்கிறார்..

கடகம் ராசியினரின் லாபஸ்தானத்தை குரு பார்வை செய்கிறார்...
ஆகவே மேற்க்கண்ட ராசியினருக்கு நல்ல லாபம் கிடைக்கும்....
குரு பலம் பெறும் ராசியினர் யார்..?
சிம்மம்,ரிசபம்,மீனம்,மகரம் ,விருச்சிகம் இவர்கள் ராசியினருக்கு 2,5,7,9,11 ல் குரு வந்திருப்பதால் இவர்களுக்கும் பணம் சரளமாக வந்து சேரும்.
மத்த ராசிக்காரங்க எல்லாம் சோர்ந்து போயிட வேண்டாம்...திசா புத்தி நல்லாருந்தா ஜாதகத்தில் குரு நல்ல நிலையில் இருந்தா நல்லதே நடக்கும்..