சி.ஆர்.பி.எப்., தேர்வு முடிவு

சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையில் சேருவதற்காக, சென்னை, ஆவடியில் நடந்த எழுத்துத்தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளன.


சி.ஆர்.பி.எப்., தொழில்நுட்பம் மற்றும், 'டிரேட்ஸ்மென்' பணியிடங்களில் சேர, ஆண், பெண் ஆகிய இரு பிரிவினருக்காக, கடந்த மே, 29ல் எழுத்துத்தேர்வு நடந்தது. அதன் முடிவுகள், crpfindia.com மற்றும் crpf.nic.in ஆகிய, இரு இணையதள முகவரிகளில் வெளியிடப்பட்டு உள்ளன.