வேளாண் படிப்புக்கு ஆன்லைனில்விண்ணப்பிக்க இன்றே கடைசி.

கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்குஉட்பட்ட கல்லுாரிகளில் படிக்க, 35 ஆயிரம் மாணவ, மாணவியர் விண்ணப்பித்து உள்ளனர். ஆன்லைனில் விண்ணப்பிக்க, இன்றேகடைசி நாள்.


            கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ் செயல்படும், 14 உறுப்பு கல்லுாரிகள், 19 தனியார் கல்லுாரிகளில், பி.எஸ்சி., வேளாண்மை, தோட்டக்கலை, உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து, வனவியல், பட்டு வளர்த்தல் ஆகிய படிப்புகள் பயிற்று விக்கப்படுகின்றன; பி.எஸ்சி., வேளாண் வணிக மேலாண்மை என்றபடிப்பும் உள்ளது.இவற்றுடன், பி.டெக்., வேளாண் பொறியியல், உணவு பதப்படுத்துதல், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல், வேளாண் புதுமை தொழில்நுட்பம்,உயிர் தொழில்நுட்பம், உயிர் தகவலியல், தோட்டக்கலை படிப்புகளும் பயிற்றுவிக்கப்படுகின்றன. இப்படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, இன்றுடன் நிறைவு பெறுகிறது.