சென்னை
அண்ணா பல்கலையில், இன்ஜி., படிக்க விண்ணப்பித்துள்ள, 1.31 லட்சம்
பேருக்கான கவுன்சிலிங், நாளை துவங்க உள்ளது. முதற்கட்டமாக, விளையாட்டு
பிரிவு மாணவர்களுக்கு, நாளை கவுன்சிலிங் நடக்கும். நாளை மறுநாள்,
மாற்றுத்திறனாளிகளுக்கான கவுன்சிலிங் நடக்கிறது.
இதையடுத்து, வரும், 27ம் தேதி, பொது பிரிவு கவுன்சிலிங் துவங்குகிறது. கவுன்சிலிங் வரும் மாணவியருக்கு, அண்ணா பல்கலை சார்பில் தங்கும் இடவசதி செய்யப்பட்டு உள்ளது.
இதையடுத்து, வரும், 27ம் தேதி, பொது பிரிவு கவுன்சிலிங் துவங்குகிறது. கவுன்சிலிங் வரும் மாணவியருக்கு, அண்ணா பல்கலை சார்பில் தங்கும் இடவசதி செய்யப்பட்டு உள்ளது.